Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிகரித்த FD வட்டி விகிதம்!
நாடு முழுவதும் பல வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ஆக்சிஸ் வங்கி நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டியை அதிகபட்சமாக 6.15% வரை உயர்த்தி இருக்கிறது.
வட்டி விகிதம்
தனியார்த் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஆர்பிஐ வங்கி உயர்த்தியதை அடுத்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக ஐசிஐசிஐ வங்கி டெபாசிட் வட்டியை உயர்த்திருந்த நிலையில் தற்போது ஆக்சிஸ் வங்கியும் நிலையான வைப்பு நிதிக்கு வட்டியை உயர்த்தி இருக்கிறது. அதன் படி 2 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் அக். 1ஆம் தேதி முதல் அமலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆக்சிஸ் வங்கியில் 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையான நிலையான வைப்பு நிதிக்கான வட்டி 6.15%- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல மூத்த குடிமக்களுக்கு 6.90% வட்டி கிடைக்கிறது. மேலும் 7 முதல் 29 நாட்கள் வரை டெபாசிட்டுக்கு 2.75% வட்டியும், 30 முதல் 3 மாதங்களில் வைப்பு நிதிக்கு 3.25% வட்டியும் கிடைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு எப்போது? || தேர்வாணையம் தகவல்!
Exams Daily Mobile App Download
அதே போல 3 முதல் 6 மாதங்களுக்கு முதிர்ச்சியடையும் நிலையான வைப்பு நிதிக்கு 3.75% வட்டியும், 6 முதல் 9 மாதம் வரையான டெபாசிட்டுக்கு 4.65% வட்டியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 9 மாதம் முதல் 1 வருடத்திற்குள் முதிர்ச்சி அடையும் டெபாசிட்டுகளுக்கு 4.75% வட்டி கிடைக்கும். 1 வருடத்துக்கு மேலான டெபாசிட்டுக்கு 5.45% வட்டி விகிதம் வழங்கப்படும். மேலும் ஆக்சிஸ் வங்கி 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 6.15% வட்டி கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்