தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக சட்ட பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்புகளையும் முக்கிய திட்டங்களையும் அறிவித்தார்.
மானியக் கோரிக்கை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. மேலும் கொரோனா நிவாரணத் தொகையாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் கடந்த 2022 மே மாதம் முதல் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு? அரசின் முடிவு என்ன? முழு விவரம் இதோ!
அதனைத் தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுகளை அச்சிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி ரூபாய் 4000 நிவாரணத்தொகை இரு தவணைகளாக வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம், கருப்பட்டி ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான மானியக்கோரிக்கை விவாதம் இந்த மாதம் நடைபெற்று வருகிறது.
அடுத்த 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
அதில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெற்றது. சேவையினை அளிக்கும் பொருட்டும், நேரடியாக தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும், இந்திய அஞ்சல் துறையின் மூலம் பயனாளிகளின் இருப்பிடத்திற்கு பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படும் என்று தெரிவித்தார். ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதில் கேழ்வரகு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.