Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் 5ஜி பாஸ்ட் இன்டர்நெட்!

0
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் 5ஜி பாஸ்ட் இன்டர்நெட்!
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் 5ஜி பாஸ்ட் இன்டர்நெட்!
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் 5ஜி பாஸ்ட் இன்டர்நெட்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாதத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தால், ஆகஸ்ட் மாதம் முதல் பயனர்களுக்கு சேவை வழங்கப்படும் என தொலைத்தொடர்பு துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

5ஜி பாஸ்ட் இன்டர்நெட்:

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறுகிறது. 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2022 ஜூலை மாதத்தில் நடத்தவும், 5ஜி சேவைக்கான வர்த்தக வெளியீடு சுதந்திர தினத்தன்று நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. 2022-23-ம் நிதி ஆண்டில் 5ஜி சேவையை அளிக்க முன் வரும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம்.

Exams Daily Mobile App Download

இதில் ஏர்டெல் நிறுவனம் முதலாவதாக சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 12 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் பலதும் ஊசலாட்டத்தில் இருக்கிறது. இதனால், 5ஜி ஏலத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஏலத்தில் 72Ghz திறனுள்ள அலைக்கற்றை, 5 பில்லியன் ரூபாய் முகமதிப்புடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் ஆயுள் காலம் 20 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி ரயில்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகைகள் கிடையாது – மத்திய அரசு திட்டவட்டம்!

முதல் கட்டமாக, இந்தியாவில் முதல் 5ஜி சேவைகள் 13 முக்கிய நகரங்களில் தொடங்கப்படும். இந்த நகரங்களில் சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, புனே, காந்திநகர், ஜாம்நகர், மும்பை, ஏஐ அகமதாபாத், சண்டிகர் ஆகியவை அடங்கும். மேலும் டெலிகாம் சேவை வழங்குநர்களுக்கு வணிகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதற்காக நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. மேலும் ஏர்வேவ்களுக்கான முன்பணத்தை நீக்கியுள்ளது. இதுமட்டுமின்றி ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைக்கு 20 சமமான மாதாந்திர தவணைகளில் செலுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!