ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது இன்றியமையாதது. மேலும் தற்போது அனைத்து செயல்பாட்டுகளுக்கும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் திருத்தி கொள்ளலாம். இதனை செய்வதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆதார் கார்டு

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. மேலும் பல்வேறு சேவைகளை பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. அதனால் அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

தமிழகத்தில் ஆக.15ம் தேதிக்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தகவல்!

அத்துடன் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக தனி நபரை சுலபமாக அடையாளம் காண முடியும். தற்போது ஆதார் கார்டில் ஏதேனும் தவறுதலாக விவரங்கள் இடம் பெற்றிருப்பின் அவர்கள் ஆன்லைன் முறையில் வீட்டில் இருந்தபடியே மாற்றிக் கொள்ளலாம். இதனை மேற்கொள்ள முதலாவதாக UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று புதுப்பிக்க வேண்டும். இதில் தங்கள் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள உள்ளூர் மொழியிலும் புதுப்பிக்க இயலும்.

தற்போது ஆதாரில் உள்ள தவறுதலான விவரங்களை புதுப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

1. இதற்கு முதலாவதாக யுஐடிஏஐ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதில் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

3. இதனை தொடர்ந்து தற்போது கேப்ட்சா குறியீட்டை சரியாக கொடுக்க வேண்டும்.

4. அதன் பின் தங்களின் தகவல்களை உள்ளிட வேண்டும். இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

5. இதையடுத்து புதிய பக்கம் திரையில் காண்பிக்கப்படும். இதில் “தரவைப் புதுப்பி” என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

6. அதன் பிறகு மீண்டும் OTP அனுப்பப்படும். இதனை உள்ளிட்டு “தொடரவும்” என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு – கல்வித்துறை அறிவிப்பு!

7. இப்போது அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு தங்களுக்கு புதுப்பிப்பதற்கான கோரிக்கை எண் அனுப்பப்படும்.

8. இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதில் நீங்கள் எந்த தகவலையும் மாற்றலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!