ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போன் நம்பரை இணைப்பது எப்படி?
இந்தியாவில் உள்ள ஆதார் கார்டுகளை UIDAI இணையதளத்தின் மூலம் புதிய போன் நம்பரை எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஆதார் கார்டு:
இந்திய நாட்டை பொறுத்த வகையில் ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. நாட்டில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ள அடையாள சான்றுகளில் ஒன்றாக ஆதார் கார்டு வந்து விட்டது. ஒரு புதிய பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய, புதிய சிம் கார்டை வாங்குதவற்கும் அல்லது கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பரிசோதனைகளை செய்ய என இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கு, புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்கவும் ஆதார் கார்டு மட்டுமே பயன்படுகிறது.
தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஆதாருடன் மொபைல் எண்ணை இணைப்பது மிக முக்கியமானது. உண்மையில், இன்றைய காலகட்டத்தில் பலரிடம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொபைல் எண்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஆதார் அட்டையுடன் எந்த எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கும். சில நேரங்களில் சில காரணங்களால் புதிய மொபைல் நம்பர் வாங்க வேண்டியிருக்கும். அந்த நம்பரை ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டியிருக்கும்.
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – TDS தொடர்பான புதிய விதிகள்!
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வீட்டில் அமர்ந்து கொண்டே எளிதாக கண்டறியலாம். முதலில் UIDAI இணையதளத்தில் ask.uidai.gov.in க்கு செல்லவும். தற்போது நீங்கள் வைத்திருக்கும் போன் நம்பரை பயன்படுத்தி உள்நுழையவும். ஆன்லைன் ஆதார் சர்வீஸ் செக்ஷனிலிருந்து இருந்து மொபைல் நம்பர் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இப்போது அதில் கேட்கப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் கேப்ட்சா குறியீட்டை சரியாக நிரப்பவும். இப்போது உங்கள் புதிய போன் நம்பருக்கு OTP வரும், அதனை அந்த தளத்தில் உள்ளிட்ட பிறகு ‘சேவ் அண்ட் புரோசீட் ‘ என்பதைக் கிளிக் செய்யவும்.