ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – கடன் பெரும் வாய்ப்பு, வங்கிகள் முக்கிய அறிவிப்பு!
ஆதார் கார்டு வைத்து ஒருவர் எளிதாக கடன் வாங்கி விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு வசதிகளை வங்கிகள் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்த தகவலை படிக்க விரும்பினால் இந்த பதிவை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளவும்.
ஆதார் கார்டு
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒரு அடையாள ஆவணமாக எல்லோரிடமும் உள்ளது. அதாவது பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய உலக அளவில் மிகப்பெரிய அடையாள ஆவணமாக ஆதார் (UIDAI) ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டில் பெயர்,பாலினம்,மொபைல் நம்பர் மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கியுள்ளது
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இந்த ஆதார் கார்டை மூன்று முறையாக எடுக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு ஒரு முறை, 10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒருமுறை,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு முறை என்று 3 முறையாக எடுக்கப்பட வேண்டும். இந்த ஆதார் கார்டில் குறிப்பிடப்படும் 12 டிஜிட் எண் மட்டும் எப்போதும் மாறாது. ஆகையால், ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பயோ மெட்ரிக் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்ட ஆதார் கார்டில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் வீட்டில் இருந்தே செய்வதற்கான வசதியும் UIDAI தளம் ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இனி அரிசிக்கு பதில் ‘இது’ வழங்கல்!
இப்படி பட்ட, இந்த ஆதார் கார்டு எல்லா விதமான பணிகளுக்கும் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையை வைத்து புதிய மொபைல் வாங்க, வாக்காளர் அடையாள அட்டை வாங்க, வாகனங்கள் வாங்க மற்றும் ஓட்டுநர் உரிமம் வாங்க போன்ற உள்ளிட்ட பல வேலைக்கு ஆதார் அட்டை பயன்படுகிறது. அந்த வகையில் ஆதார் கார்டு இருந்தால் ஒருவர் எளிதாக கடன் வாங்க முடியும் என்றும் அறிவித்துள்ளது. இதற்காக பல்வேறு வசதிகளை வங்கிகள் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.