தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கவனத்தில் கொள்ளுமா அரசு?
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும், வெப்பத்தின் தாக்கமும் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. இதனால் கொரோனா மற்றும் கோடை வெப்பத்திலிருந்து குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா மற்றும் வெயில் தாக்கம்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பிறகு தமிழகத்தில் ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களிடையே கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறுமா என அச்சம் நிலவி வந்தது. கொரோனா பரவல் எவ்வளவு அதிகரித்துக் கொண்டே சென்றாலும் கண்டிப்பாக இந்தாண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் 8 நகரங்களில் வெப்பநிலை 100டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி கொண்டிருக்கிறது. எப்போதும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில்தான் பொதுத்தேர்வு துவங்க இருக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் கொரோனா மற்றும் வெப்பத்தின் தாக்கம் இரண்டையும் சமாளித்து கொள்ள வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.