தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் அதை விசாரித்த பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிரடி உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டன. 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இதற்கிடையில் ஜனவரி முதல் வாரத்தில் ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவத் தொடங்கியது. இதன் பரவல் கொரோனவை விட தீவிரமாக இருந்ததால் தமிழகத்தில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் பலனாக மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது.

தமிழகத்தில் ஏப்.19ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல், 1 முதல் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. மேலும் நடப்பு ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று உறுதி அளித்து பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். இதன் அடிப்படையில் அடுத்த மாதம் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, வார இறுதி என, கடந்த 14 ஆம் தேதி முதல் வரும் 17 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை – 85 காலிப்பணியிடங்கள்

இந்த நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் மாணவர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் நீண்ட நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டதால், இன்னும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் முடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, விடுமுறை நாட்களிலும் ஒருசில தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக, பள்ளிக் கல்வித் துறைக்கு புகார்கள் வந்து உள்ளது. இந்த சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களை தனியார் பள்ளிகள் வலுக்கட்டாயமாக வரவழைப்பதாகவும் புகார் வந்தது. இந்நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!