தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக தங்க நகைகளை அடமானம் வைத்து உள்ளவர்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அரசாணை வெளியிட்டு இருந்தார். இதன்படி நகைக்கடன் வாங்கியவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கலெக்டர் வெளியிட்டு உள்ள புதிய தகவல் பயனாளர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முக்கிய வாக்குறுதியாக வாக்காளர்களுக்கு குறிப்பிட்டு இருந்தது. அதாவது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகையை அடமானம் வைத்து உள்ளவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதற்கிடையே கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்டுள்ள கடன் தள்ளுபடியை பெற புதிய நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதன் மூலம் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்களின் எண்ணி்க்கையை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது தான் தற்போது எழுந்துள்ள சிக்கல்.

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு – காலைநேர வகுப்புகள் நேர மாற்றம் அறிவிப்பு!

அதாவது நகையை 5 சவரனுக்கு குறைவாக இரண்டு, மூன்று பகுதிகளாக பிரித்து வைத்து உள்ளவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், 40 கிராமுக்கு (5 சவரன்) மேல் ஒரு கிராம் அதிகமாக நகை அடமானம் வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு நகைக் கடன்கள் தள்ளுபடி கிடையாது என்று திமுக அரசு தற்போது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. தற்போது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறாததை கண்டு பலரும் மிகுந்த ஏமாற்றமும், அரசின் மீது கடும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகை – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

அந்த செய்தி குறிப்பில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி வாக்குறுதி படி, பயனாளிகள் நகைக்கடன் தள்ளுபடியை பெற்று வருகின்றனர். அந்த வகையில் நாகை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் – 59, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்-2, வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்- 1, வேதாரண்யம் வேளாண் உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்-1, வேதாரண்யம் ஊரக வளர்ச்சி வங்கி -1, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் – 9 என மாவட்டத்தில் உள்ள மொத்த 73 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்ற 18,412 நபர்களுக்கு கடன் தொகை ரூ.5371.27 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!