மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) கிடைப்பது உறுதி?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) கிடைப்பது உறுதி?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) கிடைப்பது உறுதி?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) கிடைப்பது உறுதி?

கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட 34% அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான DA உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் 2022 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) தொகை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பலனடைய இருக்கின்றனர். இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான DA தொகையை அறிவிப்பதில் மத்திய அரசு ஊழியர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. அதாவது, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் DA உயர்வு அறிவிக்கப்படுவது உண்டு.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட DA உயர்வை அடுத்து, ஜூலை மாதத்தில் DA குறித்த அறிவிப்பு இருக்காது என சொல்லப்பட்டது. இந்த நிலையில், ஜூலை 2022ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. அதாவது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குறைந்துள்ள AICPI இன்டெக்ஸ் (அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) உட்பட பல காரணிகளைப் பொறுத்து DA உயர்வுகள் பின் தங்கி இருந்தன. இருப்பினும், மார்ச் மாதத்தில் AICPI புள்ளிகள் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் கண்டது.

பணத்திற்காக அண்ணன்களை சார்ந்திருக்கும் கண்ணன், கோபத்தில் ஐஸ்வர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!

அதாவது AICPI மார்ச் மாதத்தில் 1 புள்ளியாக அதிகரிக்கிறது. முன்னதாக ஜனவரி 2022ல், AICPI குறியீட்டின் எண்ணிக்கை 125.1 ஆக இருந்தது. பிப்ரவரியில் இது மேலும் சரிந்து 125க்கு வந்தது. இதையடுத்து மார்ச் மாதத்திலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1 புள்ளி ஏற்றம் கண்டு இப்போது126 ஆக அதிகரித்தது. இதனால் ஜூலை 2022ல் DA தொகை மூன்று சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எண்கள் வெளியான பிறகுதான் இறுதி முடிவு எடுக்கப்படும். வரும் மாதங்களிலும் இதே நிலை தொடர்ந்தால், அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!