தமிழகத்தில் ரூ.30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ரூ.30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் - முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் ரூ.30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் - முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் ரூ.30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் நேற்று தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியகம்:

தமிழகத்தில் நேற்று மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து மாபெரும் பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கை நடத்தியது. இந்தக் கருத்தரங்கை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் வேளாண்மை துறை முன்னிலையில் இருந்து வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதற்கு அடுத்த படியாக ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித் துறை செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும் தமிழக ஜவுளி துறையானது 31 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. தொடர்ந்து வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் ரூ.2.50 கோடி செலவில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – நவம்பர் 28 முதல் தொடக்கம்!

Exams Daily Mobile App Download

மேலும் சென்னையில் உலகத் தரத்திலான மெகா ஜவுளி நகர் அமைக்கப்படும். அத்துடன் மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில், கரூர், திருப்பூர் ,காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கும் பணிகள் வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!