TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் குரூப் 1 பணிக்கான முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டை TNPSC இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 1:
தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா தாக்கம் காரணமாக எவ்வித போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பும் நிலையில் தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான அரசு போட்டித் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தாண்டு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூரில் நாளை (மார்ச் 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன்படி அண்மையில் அதிக தேர்வர்கள் எழுத கூடிய குரூப் 2, 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் மார்ச் 23ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மே 21ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குரூப் 1 தேர்வு துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகிய பணியிடங்களுகாக நடத்தப்பட்டு வருகிறது.
TN TRB 9494 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – வருடாந்திர தேர்வு அட்டவணை!
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்று 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு குரூப்1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கிடையில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் குருப் 1 பணிகளுக்கான தேர்வு மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.