TNPSC Group 2, 2A தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசுத்துறைகளில் 5529 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு வருகிற மே 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று TNPSC இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, குரூப் 1, குரூப் 2, குரூப் 2A , குரூப் 3, குரூப் 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நடப்பு ஆண்டு குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பு படி, ஏராளமானவர்கள் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர். குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – காயம் காரணமாக விலகும் ரவீந்திர ஜடேஜா?
இந்த ஆண்டு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற உள்ளன. குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவில் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடத்தில் இருந்து 100 வினாக்களும், இரண்டாம் பிரிவில் பொது அறிவு பகுதியில் (பட்டப்படிப்புத் தரம்) 75 வினாக்களும் கணிதப்பகுதியில் (பத்தாம் வகுப்புத் தரம்) 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணிநேரம் ஆகும்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு வருகிற மே 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் TNPSCன் அதிகாரபூர்வ தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. எனவே தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுத வருபவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்க வேண்டும், மாஸ்க் அவசியம், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.