மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தீபாவளிக்கு பாதி போனஸ் தான்!
மத்திய அரசின் தபால் துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸ் பாதி தான் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 60 நாட்கள் போனஸ் மட்டுமே வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி போனஸ் :
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் தொகை வழங்கப்படும். நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போனஸ் அறிவிப்பு வெளியாகி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு உச்ச வரம்பு 7 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் 30 நாட்களுக்கான சம்பளம் போனசாக வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (அக்.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் மத்திய அரசு அலுவலகங்களில் ஓராண்டில் 240 நாட்கள் வீதம் மூன்று ஆண்டுகள் தினக்கூலியாக பணியாற்றிய ஊழியர்களும் போனஸ் பெற தகுதியுடையவர்கள், அதனால் அவர்களுக்கு விரைவில் போனஸ் வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தபால் துறை ஊழியர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த ஊழியர்களுக்கு 120 நாட்களுக்கான போனஸ் வழங்க நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. பாதி போனஸ் மட்டுமே வழங்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நவ.1 முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தல்!
அதாவது 60 நாட்களுக்கான போனஸ் மட்டுமே அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ராமின் டாக் சேவக், கேஷுவல் தொழிலாளர்கள், குரூப் பி-யின் நான் கெசடட் அதிகாரிகள், எம்டிஎஸ் மற்றும் குரூப் சி ஊழியர்கள் ஆகியோருக்கு ரூ. 7000 கிடைக்கும் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.120 நாட்கள் உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை கெஸெட்டட் அல்லாத ஊழியர்களுக்கு வழங்குவதற்கான கோரிக்கையும் மறுக்கப்பட்டது இதனால் தபால் துறை ஊழியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.