தமிழகத்தில் குற்றங்களை தடுக்க ஹேக்கர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு – காவல்துறை அதிரடி!

0
தமிழகத்தில் குற்றங்களை தடுக்க ஹேக்கர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு - காவல்துறை அதிரடி!
தமிழகத்தில் குற்றங்களை தடுக்க ஹேக்கர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு - காவல்துறை அதிரடி!
தமிழகத்தில் குற்றங்களை தடுக்க ஹேக்கர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு – காவல்துறை அதிரடி!

தமிழகத்தில் சமீப காலத்தில் ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்கும் ஹேக்கர்களுக்கு காவல் துறை சார்பில் போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறும் ஹேக்கர்களுக்கு பரிசுத் தொகை வழங்க இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹேக்கர்கள் போட்டி:

நாடு முழுவதும் ஒரு பக்கம் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், மறுபக்கம் ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. என்ன தான் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒரு சிலர் நல்லவிதமாக பயன்படுத்தி வந்தாலும், அதனை தீயவழியில் ஒரு சில மோசடி கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் காவல்துறையினருக்கு மோசடியை கண்டுபிடிப்பதில் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அந்த வகையில் குற்றங்களை தடுக்க உதவும் ஹேக்கர்களுக்கு போட்டி வைக்க இருப்பதாக சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக மக்களே உஷார்… அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் சிசிடிவி குறைபாடுகளை களையும் நோக்கில் ஹேக்கர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் காவல்துறை சந்தித்து வரும் பிரச்சனைகளை தீர்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் பரிசு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் குற்றங்கள் தடுப்பது மட்டுமில்லாமல், தொழில்நுட்பத்தை நல்ல விதத்தில் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் காவல்துறை இந்த முயற்சியை எடுத்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!