தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு தடை – உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு கடந்த வருடம் பாதுகாப்புத் துறை ஆணையர் தடை விதித்தார். இந்த உத்தரவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தடை உத்தரவு:
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இத்தகைய பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கை இளமை காலத்திலேயே கேள்விக்குறியாகி விடுகிறது. அது மட்டுமல்ல போதை பொருட்களில் கலந்துள்ள வேதிப்பொருட்களால் உடலுக்கும் தீங்கும் ஏற்படுகிறது.
2022ம் ஆண்டில் 46% கூடுதலான சுங்க கட்டணம் வசூல் – மத்திய அரசு வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்!!
புகையிலையால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் குட்கா, பான் மசாலா, புகையிலை போன்ற பொருட்களை பயன்படுத்துபவர்கள் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து ஆராயப்பட்டு கடந்த 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் தமிழக பாதுகாப்பு ஆணையம் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதித்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்த தடையை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இது குறித்த விசாரணையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்க உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தர சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.