IPL 2022: ஹர்திக் பாண்டியா கேப்டனாகும் அணிக்கு “குஜராத் டைட்டன்ஸ்” என பெயர் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
IPL 2022: ஹர்திக் பாண்டியா கேப்டனாகும் அணிக்கு
IPL 2022: ஹர்திக் பாண்டியா கேப்டனாகும் அணிக்கு "குஜராத் டைட்டன்ஸ்" என பெயர் - அதிகாரபூர்வ அறிவிப்பு!
IPL 2022: ஹர்திக் பாண்டியா கேப்டனாகும் அணிக்கு “குஜராத் டைட்டன்ஸ்” என பெயர் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் 15 வது IPL சீசனில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் அகமதாபாத் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அகமதாபாத் அணியின் பெயர் மாற்றப்பட்டதாக அணியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள் .

IPL 2022:

இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் IPL கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்போட்டியில் வீரர்களை அணியில் எடுக்கும் ஏலம் அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடக்க உள்ளதாக BCCI அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு IPL போட்டிகள் துபாயில் நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டுக்கான IPL அணிகளின் ஏலமும் துபாயில் நடந்தது. ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவிருந்த IPL ஏலம் ஒரு மாதம் காலம் ஒத்திவைத்து பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. ஏலத்தில் எந்த அணி எந்த வீரரை எடுக்கப் போவது என ரசிகர்களிடம் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தற்போது நடக்கப்போகும் IPL தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. 2 புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணி முடிவடைந்த நிலையில் புதிதாக விளையாடும் அணிகளுக்கு யார் கேப்டனாக வழிநடத்துவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக தேர்வாகியுள்ளார். இதை தொடர்ந்து அகமதாபாத் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பாண்டியாவை அகமதாபாத் அணி 15 கோடிக்கு ஏலம் எடுத்து தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

IND vs WI 2nd ODI: டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டிஸ் அணி – ரசிகர்கள் உற்சாகம்!

இதைதொடர்ந்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மற்றும் இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் கீழ் ஆகியோர் தலா 8 கோடிக்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஐபிஎல் அணி மெகா ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை அவ்வணியின் உரிமையானா CVC குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!