ஆகஸ்ட் 1 வரை 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
ஆகஸ்ட் 1 வரை 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 1 வரை 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 1 வரை 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தில் புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 8 நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 1 வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு உத்தரவை 8 மாவட்டங்களுக்கு மட்டும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (ஜூலை 16) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் கீழ் அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட், சூரத், பாவ்நகர், ஜாம்நகர், காந்திநகர் மற்றும் ஜுனகத் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 18, 19 & 20 ஆகிய தேதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – கேரள அரசு அறிவிப்பு!

அதாவது ஜூலை 20 ஆம் தேதி வரை நடைமுறையில் இருந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவானது ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்கப்பட்டு, தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவாக அமலில் இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜூலை 20 ஆம் தேதி முதல் 50% வாடிக்கையாளர்கள் அனுமதியுடன் நீர் பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்களை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் கீழ் நீர் பூங்காக்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் முதல் டோஸ் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 20 முதல் அனைத்து தனியார் மற்றும் பொது போக்குவரத்து பேருந்துகள் 100% மற்றும் AC பேருந்துகள் 75% பயணிகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – DA உயர்வு உள்ளிட்ட 5 மாற்றங்கள்!

தவிர ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக குஜராத் மாநிலத்தில் உள்ள ஹோட்டல், ரிசார்ட், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் நீர் பூங்காக்கள் ஒரு வருட காலத்திற்கு நிலையான மின்சார கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (ஜூலை 16) நிலவரப்படி குஜராத்தில் கொரோனா இறப்புக்கள் பூஜ்ஜியமாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!