குஜராத் மோர்பி பால விபத்து: உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம்!
குஜராத்தின் மோர்பி நகரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம்:
குஜராத்தின் மோர்பி நகரில் பாயும் மச்சூ நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. ரூ.2 கோடியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதனால் 500 பேர் திரண்ட நிலையில் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தினால் தற்போது வரை 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy-யில் வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்!
Exams Daily Mobile App Download
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், இன்று மோர்பியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இச்சம்பவத்தில் தேடுதல் பணி, நிவாரண-மீட்பு நடவடிக்கை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை போன்ற அனைத்து விவரங்களையும் பெற்று, தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என அவர் தெரிவித்த்துள்ளார். அதேபோல் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த கோர விபத்தால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது நாட்டுமக்கள் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.