ஜூலை 10 முதல் இரவு ஊரடங்கு அமல் – குஜராத்தின் 8 நகரங்களில் கூடுதல் தளர்வுகள்!

0
ஜூலை 10 முதல் இரவு ஊரடங்கு அமல் - குஜராத்தின் 8 நகரங்களில் கூடுதல் தளர்வுகள்!
ஜூலை 10 முதல் இரவு ஊரடங்கு அமல் - குஜராத்தின் 8 நகரங்களில் கூடுதல் தளர்வுகள்!
ஜூலை 10 முதல் இரவு ஊரடங்கு அமல் – குஜராத்தின் 8 நகரங்களில் கூடுதல் தளர்வுகள்!

கொரோனா 2 ஆம் அலை தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர கடைகள், உணவகங்கள் அனைத்தும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

குஜராத் மாநிலத்தில் தினசரி கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்துள்ளதால், 10 நகர்ப்புற இடங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை நீக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. குஜராத்தில் தற்போது 18 நகரங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் இருந்து 10 நகரங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, பாவ்நகர், ஜாம்நகர், ஜுனகத் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட 8 நகரங்களிலும் ஜூலை 10 முதல் 20 வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்நிலையில் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, மாநிலம் முழுவதும் கொரோனா நிலைமையை ஆய்வு செய்த பின்னர் புதிய பாதிப்பு குறைந்துள்ள மற்ற 10 நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கான முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடரும் மற்ற எட்டு நகரங்களில் 9 ஆம் வகுப்பு துவங்கி மற்ற வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் மீண்டும் வகுப்புகளைத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த 8 நகரங்களிலும் மேலும் சில கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,

  • கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் உட்பட அனைத்து வணிக நிறுவனங்களும் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
  • உணவகங்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
  • இந்த பகுதிகளில் நள்ளிரவு வரை வீட்டு விநியோகம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.
  • திருமண நிகழ்வுகளில் 150 பேர் வரை கலந்து கொள்ளலாம்.
  • 9 ஆம் வகுப்பு முதல் முதுகலை மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் 50% வருகையுடன் நடத்தப்படலாம்.
  • இந்த எட்டு நகரங்களில் 75% இருக்கைகளுடன் பொது போக்குவரத்து இயங்கலாம்.
  • மேலும் கல்வி நிறுவனங்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் நீர் பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

இதற்கிடையில், குஜராத் மாநிலத்தில் நேற்று (ஜூலை 9) ஒரு நாளில் 62 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக எவ்வித இறப்புகளும் பதிவு செய்யப்படவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!