மாநிலத்தில் புதிதாக 20 லட்சம் வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு இலவச கல்வி – குஜராத் தேர்தல் களத்தில் குவியும் வாக்குறுதிகள்!
குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வாக்குறுதிகளை குவித்து வருகின்றனர்.
வாக்குறுதிகள்:
குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்குமான சட்ட மன்ற வேட்பாளர் தேர்வு மற்றும் மாநில அரசின் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி அன்று வெளியிடப்படும். தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அறிவித்து வருகின்றனர். அதிலும் குஜராத் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பிஜேபி தலைமையிலான ஆட்சி தான் நடந்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனை மீறி ஆட்சி பொறுப்பிற்கு வர வேண்டும் என்று மற்ற கட்சிகளும், பொறுப்பில் இருக்கும் பிஜேபி ஆட்சியை விட்டு விட கூடாது என்றும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிஜேபி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதில் அதிகமாக வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள்,குழந்தைகள் நலனிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழருக்கு தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!!
Exams Daily Mobile App Download
அதன்படி, அறிக்கையில், அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், விவசாயிகள் நலனிற்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும், தீவிரவாத எதிர்ப்பு குழு அமைக்கப்படும், 5 ஆண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும், வயது மூத்தபெண்களுக்கு இலவச பேருந்து பயணம், KG முதல் PG வரை பெண்களுக்கு இலவசமான கல்வி போன்ற பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.