மின்சார வாகனம் வாங்கும் நபர்களுக்கு ரூ.20,000 மானியம் – முதல்வர் அறிவிப்பு!
குஜராத் மாநிலத்தில் மின்சார வாகனங்களை மக்கள் வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில் மின்சார வாகனம் வாங்கும் நபர்களுக்கு ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் விஜய் ரூபாணி அவர்கள் அறிவித்துள்ளார்.
மின்சார வாகனம்:
குஜராத் மாநிலத்தை மாசற்ற மாநிலமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநிலத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் மின்சார வாகன கொள்கை செயல்படுத்தப்படும் என்று மாநில முதல்வர் விஜய் ரூபாணி அவர்கள் அறிவித்தார். அதன்படி மின்சார பிரிவில் இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம், இ-பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கல் – வணிக நிறுவனங்களுக்கு சலுகை!
மாநிலத்தில் 4 குறிப்பிட்ட விஷயங்களை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டம் செயல்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மாநிலத்தில் மின் வாகனத்தை பிரபலப்படுத்துவதற்கும், குஜராத் மாநிலத்தை மின் வாகன உற்பத்தி மையமாக மாற்றுவதற்கும், மாநிலத்தில் மாசுபாட்டை குறைப்பதற்கும், மின்சார துறையில் இளைஞர்கள் சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் மின்சார வாகனங்களை மக்கள் வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி இருசக்கர மின்சார வாகனம் வாங்குவோருக்கு ரூ.20,000, மூன்று சக்கர மின்சார வாகனம் வாங்குவோருக்கு ரூ.50,000 மற்றும் 4 சக்கர மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் இதனை டிபிடி முறையில் வங்கியில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மின்சார வாகனம் வாங்குபவருக்கு RTO பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.