ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று கின்னஸ் சாதனை – ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த அதிசயம்!
ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று சாதனை படைத்துள்ளார். சிசேரியன் முறையில் நடைபெற்ற பிரசவத்தில் இவருக்கு 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
10 குழந்தைகள்:
பொதுவாக ஒருவருக்கு பிரசவத்தின் போது இரட்டை குழந்தைகளை பெற்று கொள்வது ஆங்காங்கே நடைபெறும். ஆனால் சில சமயங்களில் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களும் இந்த உலகத்தில் உண்டு. இவை எல்லாவற்றிற்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசு இ-சேவை மையங்கள் திறப்பு – பிற்பகல் வரை செயல்பட அனுமதி!
தென் ஆப்பிரிக்காவில் கவுடெங் மாகாணத்தைச் சேர்ந்தவர் டெபோஹோ சோடெட்சி. இவரது மனைவி கோசியாம் தாமரா சித்தோல் (37). இந்த தம்பதிக்கு திருமணமாகி ஏற்கெனவே 6 வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த கோசியாம் தாமரா சித்தோல், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
சிசேரியன் முறையில் நடைபெற்ற பிரசவத்தில் இவருக்கு 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதற்கு முன்னதாக வட அமெரிக்காவின் மொராக்கோ நகரை சேர்ந்த மாலியன் ஹலிமா சிஸ்ஸே என்பவர், 9 குழந்தைகளை பெற்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து சோடெட்சி கூறும் போது, எனக்கு 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வாழ்த்துக்கள்