தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் நேரத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் 3ம் அலை குறைந்து கொண்டு வருகிறது. அதனால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த வாரம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் காலத்தில் தொற்று பரவல் மேலும் அதிகரிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி இந்த அறிக்கையில், சாலைகளில் நிகழ்ச்சிகள் நடத்துதல், பாதயாத்திரை, சைக்கிள், மோட்டார் உள்ளிட்ட வண்டிகள் ஊர்வலம் செல்லவும் பிப்ரவரி 11ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகளின் ஊர்வலம், வேட்பாளர்கள் அல்லது தேர்தல் தொடர்புடைய எந்த ஒரு குழுவை சேர்ந்தவர்கள் ஊர்வலம் நடத்த பிப்ரவரி 11ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திறந்தவெளி மைதானத்தில் அரசு கட்சிகள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் 1000 பேருக்கும் மட்டும் கூட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
நடிகை யாஷிகா & நிரூப் திருமணம் எப்போது? அவரே சொன்ன விளக்கம்!
அதேபோல் உள் அரங்கில் நடத்தப்படும் கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடத்த உரிய சான்றுகளை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வழங்க வேண்டும். தேர்தலின் போது போட்டியிடும் வேட்பாளர்களும் மற்றும் வாக்காளர்களும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற இருக்கும் தேர்தலை கொரோனா தொற்று பரவல் இல்லாத தேர்தலாக நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.