கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறாதோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

0
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறாதோர் கவனத்திற்கு - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறாதோர் கவனத்திற்கு - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறாதோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காமல் இருந்தால் புகார்களை தெரிவிக்கலாம் என சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலைமையை சரி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன் மூலம் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் இறுதியில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

செப்.15 இரண்டு மணி நேர வங்கி சேவைகள் பாதிப்பு – எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 29.54 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை செலுத்தி கொண்ட சிலருக்கு இன்னும் சான்று வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு!

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கிடைக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்த தடுப்பூசி செலுத்தும் மையம் மூலம் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களோ அங்கு புகாரை தெரிவிக்கலாம். அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு மையத்தின் இலவச தொலைபேசி எண்ணிலும் (1077) புகார் தெரிவிக்கலாம். அதில் தீர்வு கிடைக்காவிட்டால், ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு, தொடர்புடைய உதவி மைய அதிகாரிகளின் எண்ணை பெற்று தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!