தமிழக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் புகார்களை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பதால் மாணவிகளிடம் சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக சீண்டுவதாக புகார்கள் பல எழுந்துள்ளன.
EPFO பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வேலை இழந்தோர் பணம் பெறும் வசதி!!
இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இம்முறை தமிழக அரசு ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
- பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும்.
- ஆன்லைன் WhatsApp குழுவில் தலைமை ஆசிரியர், இரண்டு ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் இடம்பெற வேண்டும்.
- பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் WhatsApp குழுவில் நியமனம் செய்யப்படுவார்கள்.
- ஆன்லைன் வகுப்புகள் குறித்த புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிக்க பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்.
- பதிவு செய்யப்பட்ட புகார்களை பதிவு செய்ய மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு தனியாக பதிவேட்டை பராமரிக்கும்.
- புகார்கள், வாய்மொழி அல்லது எழுத்து மூலம் என எவ்வாறு பெறப்பட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும்
- இன்னும் ஒரு மாத காலத்தில் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
- மேலும் குறைகளை தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும்.
- புகார்களை மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.
- பள்ளிகளில் பணிபுரியும் அனைவருக்கும் போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழுவிவரங்கள் தெரியும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்
- இணையவழி கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்வதோடு அப்பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
- அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலை தடுக்கும் வாரம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
- பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுய தணிக்கை செய்வதை உறுதி செய்யவும் பள்ளி கல்வி துறையால் உருவாக்கப்பட்ட வழங்கப்படும்.