இன்ஜினியரிங் கலந்தாய்வு செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி ஆலோசகர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வோருக்கு கல்லூரியை தேர்வு செய்யும் முறை குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வு:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கடந்த ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மற்ற கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை கொரோனா பரவும் அச்சம் காரணமாக ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. ஆகஸ்ட் 24ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 14ம் தேதி 12 ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்திய நிறுவனங்களில் அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு – டெலோயிட் சர்வே முடிவுகள்!
அக்டோபர் 17ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. கல்லூரியை தேர்வு செய்யும் முறை குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வருடம் கடந்த வருடம் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்றது. அதனால் இணையதளத்தில் இருக்கும் புள்ளி விவரங்களை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். இணையதள புள்ளி விவரங்கள் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்கின்றனர்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிப்பு? உச்சநீதிமன்றம் மறுப்பு!
ஒரு கல்லூரியை தேர்வு செய்யும் முன், அங்கு பயிலும் மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டரியவும், கல்லூரி பற்றி வேறு பரிந்துரைகளை விசாரிக்க வேண்டும். அதை வைத்து மாணவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று கல்வி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தாண்டு எந்த கல்லூரியை தேர்வு செய்வது என்பதை தேர்தெடுப்பது மாணவர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.