தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் தொடர்பான வழிகாட்டு செயல்முறைகள் – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 13,331 பேரை தற்காலிகமாக நியமனம் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் அதற்கான இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டுதல் செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது
வழிகாட்டுதல் செயல்பாடுகள்:
தமிழக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் ஏகப்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இந்த பணியிடங்களில் மாணவர் நலன் கருதி 13,331 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய இருப்பதாக தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.
Exams Daily Mobile App Download
அதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த பணியிடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் ஆகியோருக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசு தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பணி நியமனம் செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்ததை அடுத்து தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!
சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடைப்படையில் வெளியிடப்பட்டுள்ள திருந்திய வழிகாட்டுதல்கள் படி, பணி நியமனம் செய்யும் ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் எனவும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பயில்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், வகுப்பறையில் பாடம் நடத்த அறிவுறுத்தி அதன் அடிப்படையில் அவர்களின் திறனை அறிந்து அதன் பின் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.