அரசுப்பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்கள் – புதுச்சேரி அரசு!
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய மாணவர் சேர்க்கை வரும் 14 ஆம் தேதி முதல் சில வழிகாட்டுதல் நடைமுறைகளின் கீழ் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இம்மாணவர்கள் 9 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து அவர்களுக்கான 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது. அந்த வகையில் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு, ஜூலை 5ஆம் தேதி வரை பெறப்பட்டன.
தமிழகத்தில் உதவி பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு – TRB திட்டம்!
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில், 11 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் 4,045 இடங்களும், கலை பிரிவில் 2,305 இடங்களும், தொழில் பாடப்பிரிவில் 565 இடங்கள் உட்பட மொத்தமாக 6,915 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்காக மொத்தம் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், ஜூலை 14 ஆம் தேதியில் இருந்து புதிய மாணவர் சேர்க்கை துவங்குகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் பல மாணவர்கள் 175க்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த மாணவர்களுக்கான சேர்க்கை எப்படி நடைபெறும் என பலரும் தங்களது குழப்பங்களை தெரிவித்திருந்தனர். இதனிடையே அரசு பள்ளி தரப்பு, ‘ஒரே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளும் வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் உள்ளது.
இதன் படி அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மாணவர் சேர்க்கையை நடத்துவார்’ என குறிப்பிட்டுள்ளது. இதை தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை முடிந்தவுடன், ஜூலை 19 ஆம் தேதி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 21 ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் ஜூலை 22 ஆம் தேதி தனியார் பள்ளிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு 23 ஆம் தேதி மாணவர் சேர்க்கை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.