தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

கல்லூரிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. எனினும் மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருடம் புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுப்பதால் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் பயன்பட்டால் கடந்த ஜூலை மாதத்திலிருந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது.

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் தாம்பரம் – அரசு உத்தரவு!!

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதே போல கல்லூரிகளும் செப்டம்பர் 1 முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள், போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ள வேண்டும்.
  • தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை கல்லூரி நிர்வாகங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.
  • தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு சுகாதாரத்துறையின் உதவி உடன் கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மாற்றுத்திறனாளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம்.
  • கல்லூரியில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக், டயர்கள், போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
  • சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
  • விஷ ஜந்துக்கள் உள்ளே புகாத வண்ணம் அடைப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.
  • சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.
  • கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்லூரியை சுத்தப்படுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!