காவல் துறையினருக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி? – நீதிமன்ற உத்தரவு!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியானது, ஆரம்பம் முதல் தற்போது வரை ஒரு விவாத காரணமாகவே விளங்கி வரும் நிலையில், தற்போது ஒரு வழக்கு இது தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி:
மாநில அரசுகளுக்கு வருவாயை அளிக்கும் பல வரிகளுக்கும் மாற்றாக மத்திய அரசின் கீழ் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதனால் மாநில அரசுகளின் வருமானம் குறைந்து மிகவும் பொருளாதார சிக்கல் ஏற்படும் என்று எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், மாநில அரசுகளின் வருவாயை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது.
இந்த வரி விதிப்பானது மாநில அரசுகளை மட்டுமின்றி சாதாரண நிலை மக்களையும் அதிக அளவில் பாதித்தது. அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் அதிக அளவிலான வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரை திருநெல்வேலியில் வங்கிகள் பணம் கொண்டு செல்லும் போது அதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு ஜிஎஸ்டி வரி விதித்து முன்னதாக ஜிஎஸ்டி ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
Exams Daily Mobile App Download
5ஜி சேவை இவ்வளவு மலிவான விலையிலா? – ஆச்சரியப்படுத்தும் தகவல்!
இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், தற்போது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கி பாதுகாப்பு பணிசெய்யும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருக்கு சேவை வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை போல், காவல் துறைக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த விலக்கு அளிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இறுதியாக, காவல் துறையினர் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை மேலும் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்