இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை!!
இந்தியாவில் 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காணொலி மூலமாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களும் கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தின் 5 பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் – அரசு அறிவிப்பு!
இதன் படி சரக்கு-சேவை வரியை ரத்து செய்வது தொடா்பாக ஆய்வு செய்வதற்கு மாநில நிதியமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் கேரளம், உத்தர பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். மேகாலய நிதியமைச்சா் கான்ராட் சங்மா இந்த குழுவிற்கு தலைமை வகிக்கிறார். இந்த குழு சரக்கு-சேவை வரி குறித்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரியை நீக்குவது குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
தற்போது 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலமாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி, கொரோனா சிகிச்சை மருந்துகள், கொரோனா பரிசோதனை கருவிகள், கருப்பு பூஞ்சை பாதிப்புக்கான சிகிச்சை மருந்துகள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை நீக்குவது குறித்தும், சரக்கு-சேவை வரியை ரத்து செய்வது பற்றி அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.