TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அதிகாரபூர்வ பாடத்திட்டம் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC குரூப் 4 & VAO தேர்வு வரும் ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
குரூப் 4 & VAO பாடத்திட்டம்:
தமிழக அரசின் இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் தமிழ்நாடு நீதி அமைச்சு பணி, தமிழ்நாடு தலைமைச் செயலக பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலக பணி தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப மதர் சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணி ஆகிய பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகிறது. இந்த குரூப் 4 தேர்வு கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன!
இந்த குரூப் 4 பிரிவில் 7301 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவை தேர்வின் படி நிரப்பப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச்சில் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவுகள் தொடங்கியது. கடந்த 28ம் தேதியுடன் விண்ணப்ப பதிவுகளும் முடிவடைந்தது. மேலும் ஜூலை 27ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
இத்தேர்வில் முதல் பகுதியில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு வினாக்கள் இடம் பெறும். இதில் 40 மதிப்பெண்கள் பெறுவது அவசியமாகும். தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவுப் பகுதியில் அறிவியல் நடப்பு நிகழ்வுகள் புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் ஆகிய தலைப்புகளில் வினாக்கள் இடம்பெறும். மேலும் திறனறி வினாக்கள் இடம்பெறும்.