TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வு அறிவிப்பு 2021 – தாமதம் ஏன்? தேர்வாணையம் விளக்கம்!
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த கால தாமதம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
TNPSC:
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த தேவைகளுக்கேற்ப குருப் 1, குரூப் 2 , குரூப் 4, போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தற்போது கொரோனா பரவல் குறைந்து அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளித்து வருகிறது. இதனால் விரைவில் குரூப் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இந்த நிலையில் வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வு மற்றும் இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குருப் 4 ஆகிய தேர்வுகள் அறிவிப்பு காலதாமதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் 832 பேருக்கு கொரோனா தொற்று, பொதுமுடக்கம் அமல்? முதல்வர் எச்சரிக்கை!
அதாவது டி.என்.பி.எஸ்.சி தேர்வை பொருத்தவரையில், பிற மாநிலத்தவர்களும் எழுத விண்ணப்பிக்கலாம். இதில் தகுதித் தேர்வாக தமிழ் மொழி பாடத்தை எழுதும் போது, ஓ.சி. பிரிவில் தேர்வு எழுதுவோர் பெரும் சிரமத்தை எதிர் கொள்வர். தமிழ் மொழி தகுதித் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் குரூப் 2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.