TNPSC Group 2,2A, Group 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி – டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அப்டேட்!
தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் பல TNPSC மூலமாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 2A, குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
குரூப் 2 குரூப் 4 முடிவுகள்
தமிழகத்தில் அரசு வேலைக்காக ஏகப்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த குரூப் 2 குரூப் 4 தேர்வுகளில் பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. அதன் படி மே மாதம் 21 ஆம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இந்த தேர்வில் 9 லட்சத்து 94 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். மேலும் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 413 இடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதன் பின் ஜூலை மாதம் 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 18 லட்சத்து 50ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். பின்னர் TNPSC வெளியிட்ட அறிவிப்பின் படி குரூப் 2 குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
TNPSC தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? நாளைய இலவச மாதிரி!! முழு விவரம் இதோ!!!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின் படி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான தேர்வு முடிவு மற்றும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கில் இளைஞர்கள் இந்த தேர்வினை எழுதி காத்திருக்கும் நிலையில் தற்போது TNPSCயின் இந்த அறிவிப்பு தேர்வர்களை நிம்மதியடைய செய்துள்ளது.