TNPSC குரூப் 1 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – மே மாதத்தில் ரிசல்ட் வெளியீடு!

0
TNPSC குரூப் 1 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - மே மாதத்தில் ரிசல்ட் வெளியீடு!
TNPSC குரூப் 1 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - மே மாதத்தில் ரிசல்ட் வெளியீடு!
TNPSC குரூப் 1 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – மே மாதத்தில் ரிசல்ட் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. அதன்படி குரூப் 1 மெயின் தேர்வு கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகள் குறித்த தகவலை TNPSC தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குரூப் 1 தேர்வு

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். TNPSC தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்றவாறு குரூப் 1, குரூப் 2, குரூப் 3, மற்றும் குரூப் 4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்த சூழலில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிற மே மாதம் 21ம் தேதி அன்று தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

IPL லீக் 2022: மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – போட்டி அட்டவணை வெளியீடு!

அத்துடன் இந்த மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் நம்பகத்தன்மையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிந்தவுடன் தேர்வர்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக பிரித்து எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 1 மெயின் தேர்வு கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது.

சென்னை: 40 ஆயிரம் ரூபாயை கடந்த ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!

இத்தேர்வு துணை கலெக்டர் , போலீஸ் டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட 66 பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது. தமிழகத்தில் இத்தேர்வு 37 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கான முடிவுகள் வருகிற மே மாதத்தில் வெளியிடப்படும் என்றும் TNPSC தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!