ஜனவரி 3ல் குரூப் 1 முதல்நிலைத்தேர்வு – 25 மையங்கள், 7741 பேர் பங்கேற்பு!!

0
ஜனவரி 3ல் குரூப் 1 முதல்நிலைத்தேர்வு - 25 மையங்கள், 7,741 பேர் பங்கேற்பு!!
ஜனவரி 3ல் குரூப் 1 முதல்நிலைத்தேர்வு - 25 மையங்கள், 7,741 பேர் பங்கேற்பு!!
ஜனவரி 3ல் குரூப் 1 முதல்நிலைத்தேர்வு – 25 மையங்கள், 7,741 பேர் பங்கேற்பு!!

வரும் ஜனவரி 3ம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வுகள் எழுதுவோர் விவரம் மற்றும் தேர்வு எழுதுவோருக்கான விதிமுறைகளை நாமக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

TNPSC அறிவிப்பு:

ஜனவரி 3ம் தேதி நடக்க இருக்கும் குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பை TNPSC நிர்வாகம் வெளியிட்டதால் இருந்து இதற்காக பல ஆயிரக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், கடந்த ஆண்டு நடந்த TNPSC தேர்வில் பல முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் இந்த முறை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடக்க இருக்கும் தேர்வுகளில் அரசு கூடுதல் கவனமுடன் செயல்பட்டு முறைகேடுகளை தடுப்பதற்காக பல புதிய வழிமுறைகளை கையாண்டுள்ளது. இதன் மூலம் யாரும் தேர்வில் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபட முடியாது.

தொல்லியல் அலுவலர் பணியிடங்களில் தமிழ் மாணவர்கள் புறக்கணிப்பு?? டிஎன்பிஎஸ்சி விளக்கம்!!

நாமக்கல்:

வரும் ஜனவரி 3ம் தேதி குரூப் 1 தேர்வு நடக்க இருக்கும் நிலையில் நாமக்கல் ஆட்சியர் மெகராஜ் அந்த மாவட்டத்தில் தேர்விற்கான முன்னேற்பாடுகள் மற்றும் தேர்வு எழுத வருபவர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், “மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களில் 7,741 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 25 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு எழுதும் போது முறைகேடுகள் நடக்காமல் இருக்க இரண்டு பறக்கும் படைகள், ஐந்து நடமாடும் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும், சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி பாடம் கட்டாயம் – ஆசிரியர்கள் கோரிக்கை மனு!!

தேர்வர்கள், தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள, கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தில், தேர்வாணைய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, வருங்காலங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும். தேர்வு மையத்திற்குள், கைப்பை, புத்தகங்கள், மொபைல் போன், கால்குலேட்டர், மின்னணு, கைகடிகாரங்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!