தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர்க்கு மளிகை பொருட்கள் – அதிகாரி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 14 பொருட்கள் அடங்கிய மளிகை பையை வழங்குமாறு உணவு பொருள் வழங்கல் இணை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மளிகை பொருட்கள்:
மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வந்த போது கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் மக்களுக்கு இரண்டு தவணையாக இரண்டாயிரம் வீதம் நான்காயிரம் உதவித் தொகையும், 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு பையும் வழங்கப்பட்டது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் மிகவும் பயனடைந்தனர். இதில் 1,82,197 குடும்ப அட்டைதாரர்கள் மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பு பையை பெறாமல் இருந்தனர்.
ஆவின் நிறுவனத்தில் 10 பேருக்கு பணி நியமனம் – முதல்வர் வழங்கல்!
இந்த பைகளை தற்போது கோவிட் தொற்றுக்கு ஆளாகி இருப்போர், அதிலிருந்து குணமானோர், குடிசை மற்றும் சேரி பகுதிகளில் வசிப்போர், மிகவும் நலிவடைந்தோர், பொருளாதரத்தில் பின்தங்கியோர் ஆகியோர்க்கு வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தகவல் அறிக்கை மூலம் உணவு பொருள் வழங்கல் துணை ஆணையர் தெரிவித்துள்ளர். இதனால் ஒன்றே முக்கால் இலட்சம் பயனாளிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அவர் மேலும், இந்த பைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளனவையா என்று ஆய்வு செய்து உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தி உள்ளார். இந்த பைகளை பெறுவோர்கள் இதுவரை இதனை பெறாதவர்களாகவும், இதனை பெற தகுந்தவர்களாக உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதனை பெற்றவர்களிடம் கையெழுத்து வாங்கி அறிக்கையாக தாக்கல் செய்து செப்டம்பர் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.