தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், ரூ.1000 ஊக்கத்தொகை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம், ரூ.1000 ஊக்கத்தொகை - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம், ரூ.1000 ஊக்கத்தொகை - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், ரூ.1000 ஊக்கத்தொகை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை ‘இல்லம் தேடி கல்வி’ திட்ட தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகை:

தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார். அதில் ஆர்வமாக பலர் பதிவு செய்ய முன் வர வேண்டும். இந்த திட்டத்தை நாம் அனைவரும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் தயார்!

தமிழகத்தில் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும் என்றும், 6 மாத காலம் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் எனவும் கூறியுள்ளார். திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த இணையதளம் வழி கற்றல் வகுப்புகளை எல்லாம் அந்த அந்த பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு? அடிப்படை சம்பளத்தில் ரூ.2,08,320 உயர்வு! கணக்கீடு விபரங்கள்!

மேலும் தன்னார்வலர்களுக்கு மாதம் ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக வகுப்பு வாரியாக கையேடு தயார் செய்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க தன்னார்வலர்கள் 12ம் வகுப்பு வரை கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!