தமிழக ரேஷன் கடைகளில் பயிறு வகைகள் விற்பனை – பட்ஜெட் தாக்கல்!
தமிழக அரசு சார்பில் இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி மற்றும் பயிறு வகைகள் விற்பனை செய்யப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
ரேஷன் கடைகளில் பயிறு வகைகள்:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மலிவான விலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அன்றாட உணவு தேவையை எளிதாக பூர்த்தி செய்கின்றனர். மேலும் தற்போது நிலவிய கொரோனா பேரிடர் காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள், மட்டும் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் அரசின் உதவி பயனுள்ளதாக இருந்தது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து இல்லத்தரசிகளை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு சார்பில் இன்று முதல் முறையாக வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி மற்றும் பயறு வகைகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சலுகையாக அமைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளுக்காக ரூபாய் 45.97 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் வேளாண் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறையின் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வேளாண்மை பட்ஜெட் தாக்கல் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.