2020-21ல் ஓய்வு பெற்றவர்களுக்கு DA , கிராஜூட்டி கணக்கீடு – செலவுத்துறை வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள DA தொகை, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையுள்ள காலங்களில் ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கான கணக்கிடுதல் விவரங்கள் குறித்து செலவுத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
DA உயர்வு
கொரோனா பேரலை தாக்கத்துக்கு மத்தியில் கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததான மத்திய அரசு ஊழியர்களின் DA உயர்வு இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கொடுக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் ஜூலை 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் DA மற்றும் DR முறையே 28% மற்றும் 17%மாக அதிகரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலங்களில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான DA விகிதம், கிராஜூட்டி, லீவ் காஷ்மென்ட் கணக்கீடு போன்றவற்றை கணக்கிடுவதில் அவ்வப்போது குழப்பங்கள் எழுந்து வருகிறது.
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் – தென் ஆப்ரிக்காவில் தொடக்கம்!
இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி மற்றும் லீவ் காஷ்மென்ட் தொடர்பான விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதில் ஓய்வூதியதாரர்களுக்கு DA, கிராஜூட்டி மற்றும் லீவ் காஷ்மென்ட் கணக்கீடு ஆகியவை எடுத்துக்கொள்ளப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது மத்திய செலவுத்துறை அறிவித்துள்ளபடி, 2020-21 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய நன்மைகள் பின்வருமாறு கணக்கிடப்பட உள்ளது. அதன் கீழ்,
- மத்திய சிவில் சர்வீசஸ் பென்ஷன் விதிகள், 1972ல் குறிப்பிடப்பட்டுள்ள படி, ஓய்வூதியம் அல்லது பணியாளரின் இறப்பு தேதியில் உள்ள DA, கிராஜூட்டி கணக்கிடப்பட இருக்கிறது.
- விதிகளின் அடிப்படையில், கிராஜுவிட்டி மற்றும் லீவ் காஷ்மென்ட் கணக்கிடுவதற்கான தேசிய DA சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அந்த வகையில் 2020 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பொருந்தும் DA விகிதம் 21%.
- 2020 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பொருந்தும் DA விகிதம் 24%.
- 2021 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பொருந்தும் DA விகிதம் 28% என அறிவிக்கப்பட்டுள்ளது.