அரசு பணி ஆர்வம் அதிகரிப்பு !! – 10ம் வகுப்பு கல்வி தகுதி தேர்வுக்கு பட்டதாரிகள் பதிவு !!!
இந்திய நாட்டில் வேலையின்மை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் எந்த வேலை ஆனாலும் தேடுவதற்கு அனைவரும் தயாரா உள்ளனர். அதிலும் இளைஞர்கள் மத்தியில், அரசு பணிக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த 2018ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்பட்ட, 10ம் வகுப்பு கல்வி தகுதியை கொண்ட குரூப்-4 பணிக்கான தேர்வில், 2 பிஎச்.டி. பட்டதாரிகள், 123 எம்.பில். பட்டதாரிகள் சேர்ந்தது தெரிய வந்துள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
அரசு பணிகள் :
நாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு அரசு பணி பெறுவதே லட்சியமாக இருக்கிறது. அவ்வாறு அரசு துறைகளில் உள்ள காலியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையங்கள் மூலம் நிரபப்டுகின்றன. அவரு தமிழகத்தில் செயல்படும் தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தி ஆட்களை தேர்வு செய்கிறது. இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வு, 10ம் வகுப்பு கல்வி தகுதியை அடிப்படையாக கொண்டது. இதற்கு, பல லட்சம் பேர் விண்ணப்பம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2018 பிப்ரவரி 11ல், குரூப்-4 நடத்தப்பட்டது. இதை, பட்டதாரிகளும் எழுதினர். இதில், 2 ஆராய்ச்சி படிப்பு முடித்த (பி.எச்.டி.) , 123 எம்.பில்., 1,722 முதுகலை பட்டதாரிகள் 2018ல் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கு சேர்த்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதிலிருந்து பட்டதாரிகளாக இருந்தாலும் அரசு வேலையின் மீது உள்ள ஆர்வத்தினால் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளனர்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்