சகோதரர் வெட்டியதால் உடலில் 175 தையல்கள்.. ரத்த வெள்ளத்தில் ஜி.பி.முத்து – ரசிகர்கள் ஷாக்!
டிக்டாக் பிரபலமான ஜிபி முத்து அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பின்னர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் அதிர்ச்சி அளிக்கும் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜிபி முத்து:
சில வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த டிக் டாக் செயலியில் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ஜிபி முத்து. இவர் சாதாரணமாக பேசுவதே அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். இதனால் இவரை போலவே இளைஞர்கள் பேசி மற்றவர்களை கலாய்த்து வந்தனர். இந்த புகழின் காரணத்தால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார்.
Follow our Instagram for more Latest Updates
பிக் பாஸ் வீட்டில் வந்த முதல் நாளே அனைவரின் பாசத்தையும் ஜிபி முத்து பெற்று விட்டார். மேலும், டாஸ்கில் ஜெயித்து தலைவராகவும் இருந்தார். 2 வது வாரத்திலேயே தன்னால் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது என்று கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்து விட்டார். இந்நிலையில் தற்போது ஜிபி முத்து அளித்த பேட்டி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு தனது அண்ணன், ஒரு சின்ன பிரச்சனையில் தன்னை பிளேடால் சரமாரியாக வெட்டியதாகவும், இதனால் ஜிபி முத்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் கூறியுள்ளார். அதில் அவருக்கு 175 தையல்களும் போடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது தனது அண்ணன் உயிருடன் இல்லாத நிலையில், அவர் தந்த காயத்தை விட அவர் தற்போது அவரின் பிரிவு தான் அதிக வேதனை தருவதாக கூறியுள்ளார். இவரின் இந்த தகவல் ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.