டிக்டாக் புகழ் ஜிபி முத்துவுக்கு ஏற்பட்ட சோகம் – கதறி அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் உருக்கம்!
சமூக வலைத்தளங்களில் டிக்டாக் செயலி மூலமாக பிரபலமான பலரில் ஒருவர் தான் ஜிபி முத்து. அவர் தனது நண்பர் இன்று இறந்து விட்டார் என கண்ணீருடன் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
ஜிபி முத்து:
சீனாவின் பொழுது போக்கு செயலியான டிக்டாக் மூலமாக பல திறமைசாலிகள் திரையுலகில் கால் பதித்து இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் ஜிபி முத்து. பலர் தனது நடிப்பு, நடன திறமையாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். ஆனால் ஜிபி முத்து மற்றவர்களை திட்டியே பிரபலமானவர். திருநெல்வேலி பாஷையில் அவர் திட்டும் அழகிற்கு பல சினிமா பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருக்கின்றனர். அதன் மூலமாக தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி திட்டி வந்த அவருக்கு ஆதித்யா சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பாரதியை யார் என்று கேட்ட அஞ்சலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மேலும் ப்ளாக் ஷீப் அவார்ட் என பல அவார்ட்கள் வாங்கி வாழ்க்கையில் முன்னேறியவர்களில் இவரும் ஒருவர். அவர் முன்னேற்றத்தை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது கதறி அழுது வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவருடைய உயிர் நண்பர் இன்று இறந்து விட்டதாக அவர் அழுது கொண்டே சொல்கிறார். தினமும் அந்த நண்பருடன் தான் இவர் இருப்பாராம்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆனால் இன்று அவன் இல்லை நான் இனிமேல் என்ன செய்வேன். கடவுள் என்பவர் இல்லை என கதறி அழுகிறார். எல்லாரையும் சிரிக்க வைத்த என்னை அழுக வைத்து விட்டு சென்று விட்டாய் என அவர் அழுவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. மேலும் ஜிபி முத்து ரசிகர்கள் அவர் அழுவதை பார்த்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். என்ன தான் ஜிபி முத்து அனைவரையும் சிரிக்க வைத்தாலும் அவரது அழுகை அனைவரின் மனதை உருக்கியது குறிப்பிடத்தக்கது.