தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசின் முக்கிய அறிவுரை – இதை கட்டாயமா செய்யுங்க!!
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்பட்ட விபத்துகள், இறப்புகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடுவதற்கும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் சாலை விபத்து குறித்த புகைப்படங்கள் மிகவும் வருத்தத்தை அளிப்பதாக இருந்தது. அத்துடன் இது போன்ற வேறு சில குற்றச் செய்திகளும் வெறுக்கத்தக்கதாகவும், மனதை வேதனைக்கு உள்ளாக்குவதாகவும் இருப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை.. இன்றைய வானிலை தகவல்!
Follow our Instagram for more Latest Updates
இதையடுத்து, செய்திகள் வெளியிடுவதற்கான சட்டத்தின்படி நிரல் குறியீட்டை பின்பற்ற வேண்டுமென தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியது. மேலும் அனைத்து தனியார் தொலைகாட்சி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, தொலைக்காட்சிகளில் தனிநபர்களின் இறந்த உடல்கள், ரத்தம் சிதறிக் கிடப்பது, காயமடைந்த நபர்களின் படங்கள்/வீடியோக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் இரக்கமற்ற முறையில் அடிக்கப்படுவதை காட்டுகின்றன.
இத்தகைய கொடூரமான பதிவுகளை காட்சிப்படுத்தும் போது, அத்தகைய காட்சிகளை மாற்றியமைத்தல், எடிட் செய்தல் உள்ளிட்டவை பயன்படுத்தி காட்சிப்படுத்துதல் வேண்டும். அத்துடன் விபத்துகள் மற்றும் வன்முறை சம்பவங்களை காட்சிப்படுத்தும் போது பார்வையாளருக்கு வருத்தம் அளிக்காத வகையில் இருக்க வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது