தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.50,000 வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
ரூ.50,000 நிவாரணம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அதனால் நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது.
சபரிமலை கோயில் பாதையில் மருத்துவ வசதி – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இந்த தொற்று காரணமாக தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பரவி வரும் கொரோனா தொற்றினால் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே நிவாரணமாக ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் வழங்கியுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
அந்த வகையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் நேற்று ரூ.50,000 நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.