சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதில் புதிய மாற்றம் – அரசு முடிவு!!
நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதுக்கு பதிலாக உயர்ந்த அந்தஸ்துள்ள ஒரு புதிய தேசிய விருதை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது
தேசிய விருது:
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் சிறந்த ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கப்படும். மேலும் இந்த விருதானது மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 45-47 விருது பெற்ற ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகளுக்குப் பதிலாக “உயர்ந்த அந்தஸ்துள்ள” 2 அல்லது 3 வகைகளைக் கொண்ட புதிய தேசிய விருதை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!
Exams Daily Mobile App Download
இந்த புதிய தேசிய விருதானது கேந்திரிய வித்யாலயா சங்கதன், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், சிபிஎஸ்இ, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் மற்றும் நவோதயா வித்யாலயா சமிதி போன்ற தன்னாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும் அனைத்து கற்பித்தல் தொடர்பான விருதுகளையும் உள்ளடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.