தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு அரசு வேலை – முதல்வர் உறுதி!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி அல்லாதோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
அரசு வேலை
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு செய்து இருக்கிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி அல்லாதோருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து சென்னை கோபாலபுரத்தில் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 54 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் திருமண ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் மாற்றுத்திறனாளி என பெயர் வைத்து அவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார். அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் சலுகைகள் இல்லை. அதெல்லாம் நமது கடமை என அவர் தெரிவித்தார்.
நவ.23 தமிழகத்தில் இங்கெல்லாம் பவர் கட் .. உங்கள் பகுதியும் இருக்கா? – முழு விவரம் உள்ளே!
Exams Daily Mobile App Download
மேலும் பேசிய தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை தலைவர் சிம்மசந்திரன், மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி அல்லாதோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அது குறித்து பதில் அளித்த முதல்வர், இந்த கோரிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி நிச்சயம் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.