ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்த அரசு – அக்.31 வரை பொருட்களை வங்காலாம்!
இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு இலவச பரிசுத்தொகுப்பை அறிவித்துள்ளது. இந்த நிலையில் உத்திரபிரதேச மாநில அரசு இலவச ரேஷன் விநியோக திட்டத்தில் கீழ் அக்.31 வரை ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இலவச ரேஷன்:
இந்தியாவில் கடந்த 2020,2021 ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்களை இலவசமாக வழங்கியது. மத்திய அரசின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மூலம் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
பிறகு கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. கடைசியாக கடந்த செப்டம்பர் 30 வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வந்துவிட்டத்தை அடுத்து உத்திரப்பிரதேசத்தில் இலவச ரேஷன் விநியோகம் கடந்த 20-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அக்.25 பள்ளிகளுக்கு விடுமுறை? – அரசின் முடிவு!
Exams Daily Mobile App Download
இதன் மூலம் அம்மாநில பயனாளிகள் அக்டோபர் 31ம் தேதி வரை இலவச பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் வரை இலவச ரேஷன் வழங்கும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய் மற்றும் மஞ்சள் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.