இருபாலர் பயிலும் பள்ளிகளாக மாறும் அரசு பெண்கள் பள்ளிகள் – அரசு அதிரடி முடிவு!
அனைத்து அரசு பெண்கள் பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளதை குறித்து கல்வித்துறை அமைச்சர் ரோனோஜ் பெகு நேற்று நடந்து முடிந்த அமைச்சரவை கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
மாநில அரசு அறிவிப்பு:
கேரளாவை தொடர்ந்து, பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளை இணை கல்வி நிறுவனங்களாக மாற்ற அசாம் அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, நேற்று ஜூலை 28ல் நடைபெற்ற அசாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் செய்தியாளர்களிடம் “வரலாற்றுப் பின்னணி கொண்ட சில பள்ளிகளைத் தவிர, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பெண்களுக்கான பள்ளிகளும் இருபாலர் பயிலும் பள்ளிகளாக மாற்றப்படும்” என அசாம் மாநில கல்வி அமைச்சர் ரோனோஜ் பெகு பேசியுள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் இணைய சேவை அறிமுகம் – அரசு அதிரடி அறிவிப்பு!
அத்துடன் அனைத்து அரசு பள்ளிகளிலும் 3 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை அசாமி, போடோ, பெங்காலி அல்லது பிற மொழியில் கற்பிப்பதற்கு பதிலாக ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கூடுதலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 முதல் 10 பள்ளிகளில் அஸ்ஸாமி, போடோ மற்றும் பெங்காலி மொழிக்கு இணையாக ஆங்கிலம் பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கும் எனவும், அந்த பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து மேல்நிலைப் பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்திற்குப் பதிலாக புவியியல் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு பாட பிரிவுகளாக கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள சுமார் 6,000 தனியார் பள்ளிகளும் கட்டண ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்வதை அரசு கட்டாயமாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.